Billa 2

Billa 2012

About Billa 2

Billa 2 is a forthcoming Tamil gangster-thriller film to be directed by Chakri Toleti.
It is a prequel to the 2007 film Billa and would focus on how David,
an ordinary man from the coastal regions of South Tamil Nadu, becomes Billa,
a dreaded underworld don, with Ajith Kumar reprising the role of the titular character.
The film, which is to be produced by Wide Angle Creations in association with the Hinduja Group company IN Entertainment,
was officially announced in November 2010. Filming commenced in July 2011, with the film expected to release in early 2012.

Thala News


THALA NEWS

மங்காத்தாவின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் சம்பளம் 17 கோடியாக உயர்ந்தது

Picture
Notwithstanding the fact that he had two big losses in the form of ‘Aegan’ and ‘Asal’ prior to his latest release, actor Ajithhas reportedly hiked his fee to a whopping Rs.17 crore, trade circles point out.

The actor’s latest film Mankatha has been running to packed houses all over the State and elsewhere and enters its fourth week today. Ajith, who is presently starring in the sequence film Billa-2, has reportedly demanded that he be paid Rs.17 crores for his upcoming film to be produced by producer A.M. Rathnam.

Rathnam has agreed to Ajith’s request as he anticipates the sequel film to hit the bull’s eye at the box-office and in cases if it turns out to be true, Ajit’s fee might increase further! With reports suggesting that the trio of Ajith, Vijay and Suriya are on top of the industry as they charge Rs.15 crore per film, Ajit is clearly the leader of the pack as he has pipped the other two by getting Rs.17 crore for Rathnam’s film.

Two corporate firms are said to be in talks to secure the release and distribution rights of the film Billa-2, it is said. The film has just completed its first schedule of shooting and has a long way to go before being wrapped up. The Hinduja Group, which produces Billa-2, is said to be expecting not less than Rs.50 crore to part with the film’s distribution and release rights.

There is also the possibility of Sun Pictures entering the distribution war by pitching in at the very last moment!

அஜித்தின் அடுத்த படம் யாருக்கு?

Picture
அஜித் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரது படங்களை விட அஜித் பற்றிய கிசுகிசுக்கள் கொலிவுட்டில் அதிகம் பரவி கிடக்கும்.அப்படிதான் தற்போது அஜித்தின் அடுத்தபடம் என்ன அது யாருக்கு...? எனும் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படத்தை தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் என்று கூறப்படும் ஸ்ரீ சூர்யா மூவிஸ், ஏ.எம்.ரத்னம் என்றும், மற்றொரு பக்கம் இல்லை இல்லை அஜித்தின் அடுத்த படத்தை ஜெயம் ராஜா என்றும், அதற்கான கதைகளம் தெலுங்கில் மகேஸ்பாபு நடித்து வெளிவர இருக்கும் "தூக்குடு" படம் என்று பலவாராக பரவிக்கிடக்கிறது. ஒருவேளை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், அஜித்தின் அடுத்த படம் அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

விஜய்யை வைத்து குஷி, கில்லி உள்ளிட்ட படங்களை தயாரித்த விஜய்யின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு முன்பு வரை தன் தம்பி ஜெயம் ரவியை மட்டுமே இயக்கி வந்தார்.

தற்போது அஜித்தை வைத்து படம் பண்ணபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் மங்காத்தா

Picture
மலேசியாவில் ஒரு வாகன விபத்து நடந்த சம்பவ இடத்தில் நானும் என் மலேசியா நண்பனும் இருந்தோம். எங்கள் கண்களுக்கு முன்பு மோதிய இரு வாகனங்களும் சாலையில் சிதைந்து கிடந்தன. சாலையில் இருபுறத்தில் இருந்தவர்களும் வாகனங்களை நோக்கி ஓடி வந்தார்கள் நாங்களும் தான். சரியான கூட்டம் வாகனத்தைச் சுற்றி.மலேசியா மக்களுக்கு என்ன ஒரு மனிதாபிமானம் வாகன விபத்து நடந்தவுடன் காப்பாற்ற, முதலுதவி செய்ய இப்படி கூடி விட்டார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே. அந்த நினைப்பில் என் நண்பன் மண்ணை அள்ளி கொட்டினார் வாகன நம்பரை குறித்து கொண்டிருந்தவரிடம் ஆம்புலன்ஸ்க்கு போன் பன்னவா? இல்லை. அப்புறம்...


மீண்டும் அஜித் வெங்கட் பிரபு கூட்டணி

Picture
மங்காத்தா படத்தின் விஸ்வரூப வெற்றி,

மீண்டும் அஜித் வெங்கட் பிரபு கூட்டணிக்கு மறுபடியும் அச்சாரம் போட்டு விட்டது. இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்க இருகிறார்.

இவருக்கு விஜய் படங்கள் உட்பட இவர் தயாரித்த பல படங்கள் தோல்வி அடைந்து சுமார் 100 கோடி நஷ்டத்தில் இருகிறார். இவரை கைதூக்கி விடும் முகமாக அஜித் இவருக்கு கால்ஷீட் கொடுக்க முன்வந்திருக்கிறாராம்.

இம்முறை அஜித்-வெங்கட் பிரபு கூட்டணியில் இணைந்து கொள்ளும் இன்னோரு மாஸ் ஹீரோ சிம்பு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் வெங்கட் பிரபு வட்டாரத்தில்.

பில்லா இரண்டாம் பாகம் முடிந்தததும் விஷ்ணு வர்தன், இயக்குனர் விஜய் ஆகியோருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்க எண்ணியிருந்தாராம் அஜித். ஆனால் எந்திரன் படத்துக்கு இணையாக மங்காத்தா வசூல் செய்து வருவதால், மீண்டும் வெங்கட் பிரபு என்று முடிவு செய்து விட்டாராம் அஜித்!

ரூபாய் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் மும்பை கார்ப்பொரேட் நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்க இருகிறார் என்பது ஒருபுறம் இருக்க,

இந்தபடத்துக்கு யுவன் தனது சகோதரார் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து இசை அமைக்க இருகிறார் என்கிறார்கள். இந்த ஹாட் கூட்டணியின் படத்தை நீங்கள் தயாரிப்பது உண்மைதானா என்பதை கேட்க,

ஏ.எம்.ரத்தினத்தை தொடர்பு கொண்டபோது “எதுபற்றியும் இப்போது பேசுவது சரியாக இருக்காது. பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் பின்னர் பேசுகிறேன். ஆனால் ஒன்று, இத்தனை நாளும் அமைதியாக இருந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சூர்யா மூவீஸ் பேனரில் படங்கள் வெளிவரும்” என்றார் உற்சாகமாக!

அட இது போதாதா அஜித் சிம்பு ரசிகர்களுக்கு?!


AJITH NEXT MOVIE BY A.M.RATHNAM

Picture
Ajith’s 50th film ‘Mankatha’ is setting the rating at the box-office in Tamil Nadu on fire. Reports say, after Ajith finishes Billa 2, his next project might be with A.M.Rathnam.

Sources say, “Ajith’s next project is being produced by A.M. Rathnam and right now, it looks like Vishnuvardhan will be directing the venture. However, of course, we will get a clear picture only after a while. As of now, Ajith is concentrating on Billa 2 and is working hard on his character. But the project with Rathnam will go on floors only by December, after Ajith finishes Billa 2.”

Long ago, Ajith had misunderstandings with A.M. Rathnam and Rathnam maintained the rift until the producer recently expressed his willingness to make film with the ‘Ultimate star’. Ajith has also happily come forward to accept the offer from Rathnam, and it is said the star is being paid a whopping sum of 15 Crore rupees for the proposed project.

While the deal is yet to be inked a hesitant Rathnam tells, “Yes, I will be doing a film with Ajith. I am in talks and it is too early to confirm now. The details of the project can be revealed only later.”

Ajith had also expressed his wish to join his favorite director Vishnuvardhan again for ‘Billa 2’ but since he was committed with another project, ‘Unnaipol Oruvan’ fame Chakri Toleti grabbed the opportunity!

There are also reports that Vishnuvardhan might be directing the new project of Ajith, produced by A.M Rathnam. Ajith had once revealed that he liked Vishnuvardhan’s working style and would like to be directed under him.


சூப்பர் ஸ்டார் கையால் அடிவாங்க ஆசைப்படும் அஜித்!

Picture
'மங்காத்தா'வின் வெற்றிக்கு பிறகும் அமைதியாக இருக்கிறார் அஜித். தனது அடுத்த படமான 'பில்லா 2' படத்தில் ஆர்ப்பாட்டமின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது 25-வது படமான 'அமர்க்கள(மு)ம்', இவரது 50-வது படமான 'மங்காத்தா'வும் வெற்றி பெற்ற மகிழ்ச்சி துளியும் பாதிக்காதது போல் இருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்பது போன்று சினிமா உலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது குறித்து அஜித்திடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஏகலைவன் போல இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர் ஸ்டாரை நான் தூரத்தில் இருந்து ரசித்தபடியே, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். அவர் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் அடிவாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று எனது சினிமா பயணம் ஒரு முழுமையை அடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். 'மங்காத்தா'வின் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்", என்றார். வைரமேயானாலும் தங்கத்தோட சேர்ந்தாதான் அழகுனு புரியாதவரா..........?


எல்லோருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது!: அஜித்

Picture
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 50-வது படமான 'மங்காத்தா' வசூலில் அபார வெற்றியைக் குவித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய அஜித்திடம், நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவீர்கள் என்று உங்கள் நண்பர்கள் சொல்கிறார்களே? என்று கேட்டதற்கு அவர் பதில் அளித்ததாவது, எல்லோரும் அவங்கவங்க வேலையை சரியாப் பார்த்த போதும்னு நினைக்கறேன். நான் நடிக்கறேன். சம்பாதிக்கறேன். வரி கட்டறேன். ஓட்டு போடறேன். முடிஞ்சா சில உதவிகளை செய்யறேன். குறிப்பா சட்டம்-ஒழுங்கை மதிக்கறேன். என் குடும்பத்தை கவனிக்கறேன். ரசிகர்கள்கிட்டயும் இதையேதான் எதிர்பார்க்கறேன். பாலிடிக்ஸை அரசாங்கத்துக்கிட்ட விட்டுடுங்க. அவங்க பார்த்துக்குவாங்க. எல்லோருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது. லஞ்சம் ஊழல்னு பேசறோம். இந்தியாவுல இருக்குற 120 கோடி பேருக்கும், இதுல பங்கு இருக்குன்னு சொல்லுவேன். நாம ஒழுங்கா இருக்கோமா? நம்ம வீட்டுலயும் குப்பை இருக்கு. முதல்ல அதை கிளீன் பண்ணுவோம். இன்னைக்கு எத்தனை பேர் டிராபிக் சிக்னலை பாலோ பண்ணறாங்க. சொல்லுங்க? அது ஊழல் இல்லையா? ஒரு குடிமகனா நம்ம கடைமையை செஞ்சா போதும். அதுவும் அரசியல்தான்." என்றார். அவனவன் தன் முதுகுல இருக்கிற அழுக்க என்னைக்குதான் பாத்தான்..?!


அஜித்தை, கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார்

Picture
அஜித்தை, கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்கியிருக்கிறது, 'மங்காத்தா' ஓபனிங். சன் பிக்சர்ஸின் 'எந்திரன்' படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது பெரிய ஓபனிங், 'மங்காத்தா'வுக்குத்தான். இதை எதிர்பார்த்தாரா அஜித்?

நம்பிக்கை இருந்தது. ஆனா, இவ்வளவு பெரிய ஹிட், நான் எதிர்பார்க்காதது. இந்த வெற்றியை, ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன். இதைவிட என்ன சொல்லன்னு தோணலை. சினிமாவுல அவர் துரோணாச் சாரியார்னா, நான் ஏகலைவனா இருந்து அவரை பார்த்து வளர்ந்தவன். அவர் வழிகாட்டி இல்லாம வளர்ந்த வழிகாட்டி. எனக்கும் சினிமாவுல வழிகாட்டிகள் யாருமில்ல. என் பயணமும் கிட்டத்தட்ட அவரைப் போலதான். அதனாலதான் சொல்றேன். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்னு. படத்தோட வெற்றிக்கு உழைச்ச அனைவருக்கும் நன்றி.

சினிமாங்கறதே கிளாமர்தான். ஆனா, அதை உடைக்கிற மாதிரி, மற்ற ஹீரோக்கள் செய்ய துணியாத கேரக்டரை பண்ணியிருக்கீங்களே..?
ஒரு நிமிஷம். தயவு செய்து மற்றவங்களை கம்பேர் பண்ணி கேட்காதீங்க. யாரையும் மட்டம் தட்டறதுக்காகவோ, அவங்களோட திறமையை குறைச்சு மதிப்பிடறதுக்காகவோ நான் அப்படி நடிக்கலை. நான் விரும்பினேன். 'எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது'ன்னு நான் நினைச்சேன். வெங்கட்பிரபுகிட்ட இப்படியொரு கதை கேட்டதும், அவர் சொன்னார். பிடிச்சிருந்தது. பண்ணினோம். ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்க. அவ்வளவுதான். இதனால, நான் ஏதோ சாதிச்சிட்டதாகவும் நினைக்கலை. என் பாலிசி, வாழு, வாழ விடுங்கறதுதான்.

கடந்த சில வருடங்களா, போலீஸ், டான் கேரக்டர்கள்லயே நடிக்கிறீங்களே..?

உண்மைதான். எனக்கு 40 வயசாயிடுச்சு. என் வயசுக்கான கேரக்டரை பண்ணலாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இன்னைக்கு ஆடியன்ஸோட ரசனை மாறியிருக்கு. சினிமா பற்றிய எக்ஸ்போஷர் அதிகமாயிருக்கு. ஹாலிவுட்ல இருந்து மூன்றாம் உலக நாடுகளின் படங்கள் வரை நிறைய பார்க்கிறாங்க. அதுபற்றிய விவாதங்கள் நடக்குது. இந்த காலகட்டத்துல, அதுக்கு தகுந்தாப்ல நானும் மாறணும்னு நினைக்கிறேன்.

ரொமான்டிக் படங்களும் வயசுக்கேத்த மாதிரி பண்ண முடியுமே..?

அப்படியான படங்கள் வந்தா கண்டிப்பா பண்ணுவேன்.

வருஷத்துக்கு ரெண்டு, மூணு படம் பண்ற ஹீரோக்கள் மத்தியில, வருஷத்துக்கு ஒரு படம் பாலிசி... ஏன்?

எட்டு மாசத்துக்கு ஒரு ரிலீஸ் இருக்கிற மாதிரி பண்ணலாம்னு நினைக்கிறேன். அதிகபடங்கள் பண்ணனுங்கற ஆசையெல்லாம் எனக்கில்லை. எத்தனை படங்கள் நடிக்கிறோம்ங்கறதும் முக்கியமில்லை. ஹீரோக்களுக்கும் கோல் கீப்பருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. எத்தனை கோல் பிடிச்சாலும், ஏதாவது ஒரு கோலை பிடிக்காம விட்டிருந்தா, அதை பத்திதான் சொல்லிட்டிருப்பாங்க. அதனால நல்ல கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கப் போறேன்.

கிட்டத்தட்ட இளம் ஹீரோக்கள் எல்லாருமே உங்க ரசிகர்களா இருக்காங்களே... எப்படி?

அவங்க எல்லாருக்கும் நன்றின்னு சொன்னா, அது வெறும் வார்த்தையாதான் தெரியும். அதுக்கும் மேல என்ன சொல்றதுன்னு தெரியலை.

கண்டிப்பா நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு உங்க நண்பர்கள் சொல்றாங்களே..?

எல்லாரும் அவங்கவங்க வேலையை சரியா பார்த்தா போதும்னு நினைக்கிறேன். நான் நடிக்கிறேன். சம்பாதிக்கிறேன். வரி கட்டுறேன். ஓட்டுப் போடுறேன். முடிஞ்ச சில உதவிகளைப் பண்றேன். குறிப்பா சட்டம்-ஒழுங்கை மதிக்கிறேன். என் குடும்பத்தை கவனிச்சுக்கிறேன். ரசிகர்கள்ட்டயும் அதையேதான் எதிர்பார்க்கிறேன். பாலிடிக்சை அரசாங்கத்துக்கிட்ட விட்ருங்க. அவங்கப் பார்த்துப்பாங்க.

எல்லாருமே அரசியலுக்கு வந்தா, நாடு தாங்காது. லஞ்சம், ஊழல்னு பேசுறோம். இந்தியாவுல இருக்கிற 120 கோடி பேருக்கும், இதுல பங்கு இருக்குன்னு சொல்வேன் நான். நாம ஒழுங்கா இருக்கோமா? நம்ம வீட்டுலயும் குப்பை இருக்கு. முதல்ல அதை கிளீன் பண்ணுவோம். இன்னைக்கு எத்தனை பேர் ஒழுங்கா டிராபிக் சிக்னலை பாலோ பண்றாங்க, சொல்லுங்க? அது ஊழல் இல்லையா? ஒரு குடிமகனா நம்ம கடமையை செஞ்சா போதும். அதுவும் அரசியல்தான்.


கேரளாவில் வசூலில் சாதனை புரியும் அஜித்தின் மங்காத்தா

Picture
கேரளாவில் வசூலில் சாதனை புரியும் அஜித்தின் மங்காத்தா கேரளாவில் அஜித்தின் மங்காத்தா வசூல் சாதனை படைத்து வருகின்றது.கேரளாவில் திரையிட்ட முதல் ஒரு வாரத்தில் இந்தப் படம் 1 .5 கோடி வசூலைத் தொட்டுவிட்டதாக கேரள விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு நேரடி தமிழ்ப் படமாக கேரளாவில் வெளியான எந்திரன் 9 வாரங்களில் 9 கோடியை குவித்தது.

அதன் பிறகு வேறு எந்தத் தமிழ்ப் படமும் எந்திரனில் 10 சதவீதத்தைக் கூட கேரளாவில் தொடவில்லை.

இதேபோல் ஆந்திராவிலும் மங்காத்தா நல்ல வசூலைக்குவித்து வருகின்றது பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் முதலிடம் பிடித்துள்ளது.

எந்திரனுக்குப் பிறகு கேரளத்தில் ஒரு படத்தின் வசூல் கோடியைத் தொட்டிருப்பது இதுவே முதல் முறையாம்.


அஜித்தின் அடுத்த படம் : வெளிவராத புதிய தகவல் 

Picture
ஏ.எம்.ரத்னத்தின் மனசில் குளுமனாலியின் குளிரை கொட்டியுள்ளார் அஜித். தற்போது பில்லாவில் நடித்து வரும் அஜித், அது முடிந்ததும் ரத்னம் கம்பெனிக்குதான் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

மேற்சொன்ன தகவல்கள் சில இணைய தளங்களில் வந்ததுதானே என்பவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதோ அது என்ன படம்? யார் இயக்குனர்? என்பதை முதல்முறையாக உங்களுக்கு சொல்வதில் சினிசவுத் மகிழ்கிறது.

தெலுங்கில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள ‘தூக்குடு’ படத்தின் ரீமேக்கிலேயே அஜித் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சீனுவிட்லா இயக்கி இருந்தார். மகேஸ்பாபு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். தூக்குடு என்றால் தமிழில் வேகம், துடிப்பு என்று பொருளாம். தமிழில் படத்தை இயக்கப்போவது ஜெயம்ராஜா என்பது உறுதியாகிவிட்டது.

நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம் திரையரங்கில் அஜித், ஜெயம்ராஜா ஆகியோர் தூக்குடு படத்தை பார்த்துள்ளனர். இப்படத்திற்காக அஜித்திற்கு 15 கோடி சம்பளம் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது.









மங்காத்தா நடிகருடன் டாப்சீ காதல்‎

Picture
மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்துக்கும், வெள்ளாவி பொண்ணு டாப்சிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கொலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தமிழில் இவர் நடித்து இந்த ஒருபடம் தான் வெளியாகியுள்ளது.

ஆனால் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் இவருக்கும், மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்துள்ள நடிகர் மகத்துக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது.

இவர் நடிகர் சிம்புவின் நண்பர் ஆவார். மேலும் தயாரிப்பாளர் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

சமீபகாலமாக டாப்சியும், மகத்தும் ஒன்றாக ஹோட்டல்களில் கைகோர்த்தப் படி நடந்து செல்வதை காண முடிகிறதாம்.

மேலும் டாப்சி சூட்டிங்கில் பங்கேற்கும் போது அங்கு மகத் வந்து விடுகிறாராம். படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருந்து டாப்சியை அழைத்து செல்கிறாராம். கூடவே டாப்சிக்கு தமிழ் தெரியாது என்பதால் மகத் தமிழ் கற்று கொடுக்கிறாராம்.